இலங்கை இராணுவம் 1987 இல் நடத்திய Operation Liberation இராணுவ நடவடிக்கை வெற்றிபெற்று, யாழ்குடாவை புலிகள் இழந்திருந்தால் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்திருக்குமா? - போரியல் பார்வையில் சுருக்கமாக.

நிச்சயம் புலிகள் அழிந்திருக்க போவதில்லை. 

சில தரவுகளை தருகிறேன். நீங்கேளே உங்கள் மூளையை பாவியுங்கள்.


• இலங்கை இராணுவத்தின் இந்த Operation Liberation நடந்தது 26-5-1987 இல்.

ஐந்து மாதங்கள் கழித்து இதே புலிகளுக்கும் இந்திய படைக்கும் போர் மூண்டது.

1987 அக்டோபர் மாதம் இந்திய படை ‘Operation Pawan’ மூலம் அதே யாழ்குடாவை கைப்பற்றியது. புலிகள் வன்னி காடுகளுக்கு பின்வாங்கினர்.

அதன் பின்னர் இந்தியா பின்வரும் இராணுவ நகர்வுகளை புலிகளுக்கு எதிராக நடத்தியது.

• Operation VAJRA (February-March 1988) 

• Operation VIRAT TRISHUL (March 1988) 

• Operation CHECKMAT (May-August 1988) 

• Operation TOOFAN (June 1989) 

• Operation TULIP BLOOM

• Operation SWORD EDGE 



புலிகள் அழிந்து போனார்களா? 

இல்லை. 2000 இற்கும் குறைவான போராளிகளை மட்டுமே வைத்து கொண்டு கிட்டத்தட்ட 80000-100000 இந்திய படைகளுடன் கெரில்லா பாணி போரை நடத்தி கொண்டு ராஜதந்திரத்துடன் சில காய் நகர்த்தல்களை செய்து வெற்றிகரமாக இந்திய படைகளை வாபஸ் பெறவைத்தார்கள்.

அதுபோல 1995 இல் இலங்கை இராணுவம் ‘Operation Riviresa’ மூலம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது. புலிகள் வன்னி பெருநிலப்பரப்புக்கு தமது இராணுவ வளங்களை நகர்த்தினார்கள். பின்னாளில் வன்னி பெரு நிலப்பரப்பு அவர்களின் de facto state ஆக மாறியது. 

யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர் புலிகள் நடத்திய அழித்தொழிப்பு சமர்கள்தான் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2, ஓயாத அலைகள்-3, ஜெயசிக்குறு எதிர்சமர், தீச்சுவாலை எதிர்சமர் , சத்ஜெய எதிர்சமர் இத்யாதி, இத்யாதி என்பவையெல்லாம்.

உண்மையில் இந்திய இராணுவத்தின் Operation Pawan வெற்றியடைந்ததை விட, இலங்கை இராணுவத்தின் Operation Liberation வெற்றியடைந்து இருந்தால் புலிகளுக்கு போரியல் அனுகூலங்கள் கூட இருந்திருக்கும்.

எப்படி?

இந்திய இராணுவத்தின் ஆளணி , படை வளங்களின் பலம் என்பது இலங்கை இராணுவத்தை விட பல மடங்கு அதிகமானது.

ஆளணி 

இந்திய இராணுவம் இலங்கையில் குறைந்தது 100,000 படையினரை நிறுத்தியிருந்தார்கள்.

1987 களில் இலங்கை படையின் மொத்த எண்ணிக்கையே 40000 தான்.

“By 1986 the army had 30,000 men in it and by 1987 it had climbed to 40,000 men and it stayed at this number throughout the rest of the decade.”

(Brian Blodgett எழுதிய Sri Lanka’s Military: The Search For A Mission எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து)


படை வளங்கள்

மரபு போரிற்கான படை வளங்கள் என எடுத்து கொண்டால் இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. 

இந்திய விமானப்படை, கடற்படை என முப்படைகளின் வளங்கள் இலங்கை இராணுவத்தின் வளங்களை விட பல மடங்கு பெரியது.


மற்றைய தமிழ் போராளி இயக்கங்களின் ஆதரவு

இந்திய படையின் புலிகளுக்கு எதிரான போரில், புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப், இத்யாதி இயக்கங்கள் எல்லாம் இந்திய படையினருடன் இணைந்தே சண்டையிட்டன.

புலிகள் இந்திய படை, மற்றைய போராளி இயக்கங்கள் (ஒட்டு குழுக்கள்) என இருவரையும் எதிர்த்து போர் புரிய வேண்டியிருந்தது.

ஆனால் இலங்கை இராணுவம் Operation Liberation இல் வெற்றி பெற்றிருந்தால், இந்த மற்றைய போராளி இயக்கங்களின் ஆதரவு இலங்கை இராணுவத்திற்கு இப்படி வெளிப்படையாக கிடைத்திருக்காது. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில்.

காரணம் இந்த மாற்று போராளி இயக்கங்கள் இந்திய படையினருடன் இணைந்து சண்டையிடும்போது ‘பெயரளவுக்கு’ ஒரு காரணம் இருந்தது. ‘இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டு விட்டோம். புலிகள் மட்டுமே மறுக்கிறார்கள்’ என்ற காரணம்.

ஆனால் 1987 இல் இந்த மற்ற போராளி இயக்கங்களிற்கு இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதற்கு இந்த ‘பெயரளவிலான’ காரணம் கிடைத்திருக்காது. 

பின்னர் 1990-2009 வரை இலங்கை இராணுவத்துடன் இணைந்து இந்த மற்ற போராளி குழுக்கள் (ஒட்டு குழுக்கள்) இயங்கியதுதான். 

ஆனால் 1987-1990 இற்கும் இடையில் புலிகளுக்கும் இந்த ஒட்டு குழுக்களுக்கும் இடையே பல சம்பவங்கள் நடந்திருந்தன.


பிழையான பொது புத்தி

இந்தியா அனுப்பி வைத்த இந்திய ‘அமைதி’ படை என்பது போர் செய்வதற்கான படையினர் அல்ல என கூமுட்டை போல சிலர் உளறுவதை இன்றுவரை காண்கிறேன்.

ஒரு சில உதாரணங்களை மட்டும் தருகிறேன்.


• இந்திய கடற்படை, Marine Commandos எனும் அதிரடி கமாண்டோக்களின் படையை 1987 பெப்ரவரியில் உருவாக்கியிருந்தது.

(abbreviated to MARCOS and officially called the Marine Commando Force (MCF))

"The Indian Navy is cognisant of the strategic and operational potential of SF operations. The Indian Navy's MARCOs have significant capabilities for undertaking SF operations in the maritime domain, as well as on land and by air. They can operate independently and in conjunction with Army and Air Force SF, including against non-state actors. Development of MARCO capabilities will remain a thrust area for the Navy." (MOD (Navy), 2015, p.141).

அந்த Marine Commandos உம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் பங்குபற்றியிருந்தார்கள். 

இதுபற்றி இலங்கை கடற்படையில் பணியாற்றிய Admiral Ravindra C Wijegunaratne எழுதிய கட்டுரை “The Island” பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

கட்டுரையின் தலைப்பு “Combat experience with Indian Navy Marine Commandos”.

இணைப்பு: https://island.lk/combat-experience-with-indian-navy-marine-commandos/

MARCOS இற்கு உதவிய தனது அனுபவத்தை விவரித்து இந்த கட்டுரையை எழுதியிருந்தார்.




அடுத்தது Special Forces (SF) known as Parachute (Special Forces)

இந்திய கடற்படைக்கு எப்படி அதி உயர் பயிற்சி பெற்ற MARCOS படையணியோ, அதுபோல தரைப்படையினருக்கு Para (Special Forces).

“The Indian Army's equivalent is the Para (SF), along with the Para (Airborne) within the Parachute Regiment, and the Indian Air Force's Garud Commando Force.”

இந்த Para (Special Forces) ஐ தான் , 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ம் திகதி, தலைவர் பிரபாகரனை பிடிக்க களம் இறக்கினார்கள்.

தலைவர் பிரபாகரன் கொக்குவிலில் உள்ள பிரம்படி ஒழுங்கையில் இருந்தார்.

இந்திய படை  நான்கு Mi-18 Armed version helicopter ஊடாக 103 Para (Special Forces) ஐயும், 100 சீக்கிய காலாட்படையினரையும் இறக்கி, கமாண்டோ தாக்குதலின் ஊடாக பிரபாகரனை பிடிக்க திட்டம் போட்டது. 

இது நடந்த நேரம் அக்டோபர் 12, அதிகாலை 1 மணி.

இந்த ஆபரேசன் படுதோல்வியில் முடிந்தது.

முதல் கட்டத்தில் அனைத்து  Para (Special Forces) உம் தரையிறங்கிவிட்டனர்.

அடுத்த கட்டத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சீக்கிய காலாட் படையினர் குதிக்க முயன்றபோதுதான், குதிக்க குதிக்க புலிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் எல்லாம் நடந்தது. 

புலிகளின் தாக்குதலால் Mi-18 இனால் அனைத்து சீக்கிய வீரர்களையும்  தரையிறக்க முடியாமல் போனது. 30 சீக்கிய வீரர்கள்தான் குதித்தனர். அதில் 29 சீக்கிய வீரர்கள் பலியானார்கள். காயமடைந்த ஒரு சீக்கிய வீரரை புலிகள் கைது செய்தனர்.

அதன்பின்னர் ஏற்கனவே இறங்கிய Para (Special Forces) புலிகளின் முற்றுகைக்குள் சிக்கினர்.

அடுத்தநாள் அவர்களை மீட்க இந்தியப்படை  மேலதிக துருப்பினரை அனுப்பியது. இதில் இரண்டு Tanks கள் அனுப்பப்பட்டன.

இந்த tank களின் Fire Power இன் ஊடாக முற்றுகை உடைக்கப்பட்டு, இந்த Para (Special Forces) மீட்கப்பட்டனர்.

மொத்தம் 29 சீக்கிய காலாட் படையினரும், 8 Para (Special Forces) படையினரும் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த பல மணி நேரங்களுக்குள்தான், Para (Special Forces) தமிழ் மக்களில் சுமார் 40 பேரை கொன்றிருந்தனர்.

அதில் Tank களினால் நசுக்கி கொல்லப்பட்டவர்களும் உண்டு.

இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.

இந்திய படை தமது சிறப்பு படையணிகளை எல்லாம் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தியிருந்தது.


• தமிழ்நாட்டின் இந்திய தேசியவாதிகள் இன்னும் “நாங்க ச்சும்மா சாதுவான படையினரைத்தான் அனுப்புனோம். உக்கிரமான படையினரை அனுப்பல்ல. நாங்க மட்டும் அனுப்பியிருந்தா நடக்குறதே வேற” என சமூக தளங்களில் வடை சுட்டு கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எனக்கு இதுபோன்ற சில்லறைத்தனமான விவாதங்களில் ஈடுபடுவதற்கான மனநிலை இன்று இல்லை. நான் முடிந்தவரை செறிவான கட்டுரைகளை மட்டுமே எழுதவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறேன். 


அடுத்தது Strategic gains Vs tactical defeat

இந்திய படைகள் வட கிழக்கினை கைப்பற்றி tactical gains அடைந்திருந்தார்கள்.

ஆனால் புலிகள் வன்னி காட்டிற்கு பின்னகர்ந்திருந்தபோதும் strategic gains அடைந்திருந்தார்கள். அவர்களின் strategic gains இந்த tactical பின்னடைவை தூக்கி சாப்பிட்டுவிட்டது. 

இதன் பொருள் என்ன? என்பது பற்றி விளக்கி ஒரு கட்டுரை முன்னர் எழுதியிருந்தேன். இணைப்பு கீழே.

புலிகளின் STRATEGIC GAIN உம் இந்திய அமைதிப்படையின் TACTICAL GAIN உம்


 • இதன் சாராம்சம்

இலங்கை இராணுவத்தை விட ஆளணி, படை வளங்கள், ஒட்டு குழுக்களின் ஆதரவு என பல மடங்கு பலமாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து புலிகள் இரண்டு வருடங்கள் போர் புரிந்தார்கள். இந்திய இராணுவம் ஆயிரக்கணக்கான படையினரை இழந்தது.

அதனால் 1987 இல் இலங்கை இராணுவம் Operation Liberation இராணுவ நடவடிக்கையில் யாழ்குடாவை முழுமையாக கைப்பற்றியிருந்தாலும், புலிகள்  அழிந்திருக்க போவதில்லை. இந்திய இராணுவத்திற்கு ஏற்படுத்திய இழப்பை விட அதிகமான இழப்பை இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்க முடியும். 

காரணம் மேலே கூறியதுபோல ஆளணி, படை வளங்கள்.

இத்தகைய போரியல்ரீதியான உண்மையை தெரியாமல், இன்னும் சிலர் இந்தியா மட்டும் இல்லாவிடில் இலங்கை Operation Liberation இல் 1987 லேயே புலிகளை அழித்திருக்கும் என கூமுட்டையாக உளறி கொண்டிருக்கிறார்கள்.

இந்த பொரி இன்னுமா நமுத்து போகாம இருக்கு!


க.ஜெயகாந்த்

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை

விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் 3 (கட்டம் 3,4) சமரிற்கும் வியட்நாமில் VietMinh நடத்திய தீன் பீன் பூ ( Battle of Dien Bien Phu) சமரிற்கும் இடையிலான ஒப்பீடு - போரியல் ஆய்வு கட்டுரை (பகுதி-3)

இந்திய பெருங்கடலில் சீனா-இந்தியாவிற்கு இடையேயான naval warfare இல் இந்திய கடற்படைக்கு கிடைக்கும் tactical advantage உம் அதனை சார்ந்த புவிசார் அரசியலும்- போரியல்ஆய்வு கட்டுரை [21 ம் நூற்றாண்டை செல்வாக்கு செலுத்தும்அமெரிக்க- சீன போட்டி (US-CHINA GREAT POWER COMPETITION)- குறுந்தொடர் (பகுதி-7)]